மார்ச் 10-ம் தேதி மகாசிவராத்திரயன்று மாலை நாட்டியாஞ்சலி தொடக்கவிழா நடைபெறுகிறது. யு.ஆர்.உமாநாத தீட்சிதர் தலைமை வகிக்கிறார். கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஏ.ஆனந்ததாண்டவ தீட்சிதர் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாசார துறை ஆணையர் எஸ்.எஸ்.ஜவகர் நாட்டியாஞ்சலியை தொடங்கி வைத்துப் பேசுகிறார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தலைவர் பி.சுரேந்திர்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். பிரேவியா கேப்பிட்டல் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் பாரத்பிஷ், யு.எஸ்.ஏ நியுயார்க் தமிழ்ச் சங்கம் தலைவர் பிரகாஷ் எம்.சுவாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர். நாட்டியாஞ்சலி விழாவில் மலேசியா, ஸ்ரீலங்கா, ஈரான், மஸ்கட், ஆகிய நாடுகளைச் சேர்ந்த நடன கலைஞர்களும், புதுதில்லி, மும்பை, கொச்சின், பெங்களூர், மேங்களூர், ஹைதராபாத், சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலிருந்து நடன கலைஞர்களும் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர்.